கடவுளும் – பண்பும்!

உலகமும் உலகத்தில் காணப்படுவனவும் தெய்வீகத் தன்மையால் ஏற்பட்டவை என்றால், இக்கணக்கற்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றாக சிறிது சிறிதுகாலமே இருந்து பின்னர் மறைந்து போவானேன்? தெய்வீகத்தன்மை என்பதுவே அநித்தியமா? சும்மா இருந்த கடவுள் திடீரென்று இவ்வுலகத்தை தோற்றுவிக்கும்படியான அவசியமோ, காரணமோ என்ன அவர் மூளையில் பாய்ந்தது?

கடவுளை நம்பும் முட்டாள்களே!

கடவுள்களை நம்பும் முட்டாள்களே! அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்; அவரன்றி ஒரு அணுவும் அசையாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

பெண் ஏன் அடக்கப்பட்டாள்..? ஏன் ஒடுக்கப்பட்டாள்..?

சந்திரவதனா: எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன.

பெரியார்,பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சவுத் ஆம்ப்டன் நகரில் சன்வரி 10ஆம் நாள் கொண்டாடப்பட்டது. பல அமெரிக்கர்களும்,தமிழ்நாட்டு,வட இந்திய மாநிலங்களில் இருந்தும் அமெரிக்காவில் வாழும் பலரும் கலந்து கொண்டனர்.அமெரிக்காவின் மாரிலேண்ட்,வாசிங்டன் டி.சி.,ரோடு ஐலண்ட்,நியூஜெர்சி,பென்சில்வேனியா, கன்னெக்டிகட் என்ற மாநிலங்களிலிருந்து குடும்பங்களாக வந்து கலந்து கொண்டனர். பெரியார் பன்னாட்டமைப்பு,ஆம்ணி வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அவசியமான காரியங்கள்

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் – அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் – மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் … Continued