படித்த முட்டாளே!

படித்த முட்டாளே! ஏ…. படித்த முட்டாளே! 
பல்கலைகழகத்தில்…. பட்டம் பெற்ற படித்த முட்டாளே!
படித்த முட்டாளே! ஆலயம் எங்கும் தேடி ஓடுற!

இறைவனையெண்ணி எங்கித் தவிக்கிற!

உடம்பில் சாம்பல எடுத்துப்பூசுற!
சிற்பத்தையெல்லாம் தெய்வமென்கிற!

திறமையை மறந்து மடமையில் முழ்கி
கற்பனைக் கடலில் செத்துமடியிற    (படித்த முட்டாளே)

இறைவன்  என்பவன் எங்கே இருக்கிறான்?

கடவுளை எவன் தான் கண்டு இருக்கிறான்?
உழைக்கமலலேயே  ஈட்ட நினைக்கிறபாடம்
படிக்காமலேப் பாஸ் பன்னப்பார்க்கிற !
பணம் பதவியையும் தேட நினைக்கிற !
கடவுளை வேண்டித்தினம் விரதமிருக்கின்ற   (படித்த முட்டாளே)

படிபபிற்குப்  பதவியை  எட்டிப்பிடிக்கிற !
திறமைக்குப் பரிசைக் கொட்டிக் குவிக்கிற !
உழைப்பையும் அதிகமாய்க் கூட்கிக் காட்டுற !
கிடைத்திட்ட வேற்றியை கண்டு மகிழற
நிலவையும் கூட எட்டிப் பிடிக்கிற !
தன் திறமையை மறந்து இறைமைய நாடும்  (படித்த முட்டாளே)

உடலையே அறுத்து உயிரைக் காக்கிற

கருவியை இயக்கியே வானில் பறக்கிற 
கடலில் நீந்தியே மறுகரையெறி நிக்கிற 
நாட்டையேத் தனதாக்கி ஆட்சியைப்பிடிக்கிற 
வல்லமை பல பெற்று பெரும் பணியாற்றினும்
தன்மையே உணரமல் மாய இறை நம்பும்  (படித்த முட்டாளே)

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *